எங்க ஊரு யானை by பிரசாத் வேணுகோபால்

எங்க ஊரு யானை
உருவில் பெரிய யானை
தெருவில் நடந்து வந்தால்
திரளும் கூட்டம் காண

பசிக்கும் யானை புசிக்க
பழத்தை அள்ளித் தருவோம்
பாகன் கையில் கொடுக்க
பணமும் கொஞ்சம் தருவோம்

முறங்கள் போன்ற காதை
முன்னும் பின்னும் ஆட்டி
தொங்கும் தும்பிக் கையைத்
தூக்கித் தருமே ஆசி.!