பூமியில் நாமும் வாழ்கின்றோம்


பட்டுப் பாவாடை


பட்டு குட்டிப் பாப்பாவுக்கு
குட்டி பட்டு பாவாடை.

திருவிழா வந்ததற்கு
தாத்தா தந்த பாவாடை.

மாம்பழம் நிறமிருக்கும்
மஞ்சள் வண்ண பாவாடை.
தங்கம்போல ஜொலிஜொலித்து
தகதகக்கும் பாவாடை.

கையிரண்டும் பக்கம் நீட்டி
ஆலவட்டம் சுற்றினால்
ஆளோடு சுற்றிச் சுழலும்
அழகு வண்ண பாவாடை.

பள்ளி சென்று நாளை எனது
நண்பர்களுக்குக் காட்டுவேன்.
தாத்தா வந்த செய்தி சொல்லி
மகிழ்ந்து வீடு திரும்புவேன்.

- குழந்தைக் கவிஞர்.புதுகை அப்துல்லா