அம்மா சுட்ட தோசை by பிரசாத் வேணுகோபால்

அம்மா சுட்ட தோசை
அரிசி மாவு தோசை
நெய்யை ஊற்றிச் செய்த
முறுவ லான தோசை
வறுத்த கடலைச் சட்டினி
கரைத்து தொட்டு திண்ணுவேன்
வயிற்று பசி தீர்ந்ததும்
தட்டைக் கழுவி கவிழ்த்துவேன்...

எங்க ஊரு யானை by பிரசாத் வேணுகோபால்

எங்க ஊரு யானை
உருவில் பெரிய யானை
தெருவில் நடந்து வந்தால்
திரளும் கூட்டம் காண

பசிக்கும் யானை புசிக்க
பழத்தை அள்ளித் தருவோம்
பாகன் கையில் கொடுக்க
பணமும் கொஞ்சம் தருவோம்

முறங்கள் போன்ற காதை
முன்னும் பின்னும் ஆட்டி
தொங்கும் தும்பிக் கையைத்
தூக்கித் தருமே ஆசி.!


பூமியில் நாமும் வாழ்கின்றோம்


பட்டுப் பாவாடை


பட்டு குட்டிப் பாப்பாவுக்கு
குட்டி பட்டு பாவாடை.

திருவிழா வந்ததற்கு
தாத்தா தந்த பாவாடை.

மாம்பழம் நிறமிருக்கும்
மஞ்சள் வண்ண பாவாடை.
தங்கம்போல ஜொலிஜொலித்து
தகதகக்கும் பாவாடை.

கையிரண்டும் பக்கம் நீட்டி
ஆலவட்டம் சுற்றினால்
ஆளோடு சுற்றிச் சுழலும்
அழகு வண்ண பாவாடை.

பள்ளி சென்று நாளை எனது
நண்பர்களுக்குக் காட்டுவேன்.
தாத்தா வந்த செய்தி சொல்லி
மகிழ்ந்து வீடு திரும்புவேன்.

- குழந்தைக் கவிஞர்.புதுகை அப்துல்லா

தாலாட்டு -2

ஆராரோ ஆராரோ - கண்ணே நீ
ஆராரோ ஆரிரரோ!
ஆராடித்தார் நீ அழுதாய்? கண்ணே உனை
அடித்தாரைச் சொல்லி அழு!

மாமி அடித்தாளோ? - உன்னை
மல்லியப்பூச் செண்டாலே!
மாமன் அடித்தானோ! - உன்னை
மாலையிடும் கையாலே!

அக்கா அடித்தாளோ? - உன்னை
அரளிப்பூச் செண்டாலே!
அடித்தாரைச் சொல்லியழு - அவர்க்கு
ஆக்கினைகள் செய்திடுவேன்!

தொட்டாரைச் சொல்லியழு - அவர்க்குத்
தோள்விலங்கு பூட்டிடுவேன்!

(இத்தாலாட்டின் முடிவில் தூங்காத குழந்தையொன்று தாய்க்குப் பதில் கொடுக்கிறது, கற்பனைதான்.)

யாரும் அடிக்கவில்லை! - என்னை
ஐவிரலும் தீண்டவில்லை!
பசிக்கல்லவோ நான் அழுதேன்! - என்றன்
பாசமுள்ள தாயாரே!

தாலாட்டு

முத்துச் சிரிப்பழகா!
முல்லைப்பூ பல்லழகா!

வெத்து குடிசையிலே
விளையாட வந்தாயோ?

ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே

தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ

தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ?

வானவில்

நாயும் கழுதையும் #அப்பா எப்பவோ சொன்ன குட்டிக் கதைகள்


சமாதானம் by பிரசாத் வேணுகோபால்


ஒரே அடியில் ஒன்பது பேரைக் கொன்றவன்


காட்டில் ஒரு முயல் குட்டியாம்! - நீதிக் கதை


கோபக்கார மேகங்கள்.

CBSE Vs. ICSE - ஏன் இவை மெட்ரிக் அல்லது சமச்சீர் கல்வி-யை விட மேலானது


பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்


சாவி தந்தால் ஓடிடும் கார்


ஜவ்வு மிட்டாய்


விட்டில்பூச்சி


எறும்பைப் பார்த்துக் கற்றுக் கொள்


வணக்கம் சொல்வோம்


அண்ணல் காந்தி