எங்க ஊரு யானை by பிரசாத் வேணுகோபால்

எங்க ஊரு யானை
உருவில் பெரிய யானை
தெருவில் நடந்து வந்தால்
திரளும் கூட்டம் காண

பசிக்கும் யானை புசிக்க
பழத்தை அள்ளித் தருவோம்
பாகன் கையில் கொடுக்க
பணமும் கொஞ்சம் தருவோம்

முறங்கள் போன்ற காதை
முன்னும் பின்னும் ஆட்டி
தொங்கும் தும்பிக் கையைத்
தூக்கித் தருமே ஆசி.!


4 comments:

கவி அழகன் said...

பெரிய யானையை பற்றி சிறிய கவிதை
வாழ்த்துக்கள்

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி ஐயா...

vimalanperali said...

யானை தும்பிகையால் ஆசி வழங்கிய திருப்தி பாடலை படித்தவுடன்,
நன்றாகயிருக்கிறது,வாழ்த்துக்கள்

பிரசாத் வேணுகோபால் said...

நன்றி ஐயா...