வானவில்

இந்தப் போட்டிக்காக நான் எழுதிய குழந்தைக் கவிதை.

வண்ண மெல்லாம் அற்புதமாய்
வான் மீது கண்டிடலாம்
கிண்ணம் ஒன்றைக் கவிழ்த்தது போல்
வில் போல் வளைந்துக் காட்சி தரும்
எத்தனை எத்தனை வண்ணங்கள்
எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்
ஒன்றன் பின்னால் ஒன்றாக
வண்ணம் ஏழு வந்திடுமாம்
விண்ணுக் கருகே சிவப்பு ஆரஞ்சு
இன்னும் மஞ்சள் நிறத்தோடு
பச்சை நீலம் நடுவினிலே
மண்ணுக் கருகே கருநீலம்
ஊதாவோடு தோன்றிடுமே
காலை மாலை நேரத்திலே
மண்ணில் மழைநீர் வீழ்கையிலே
சின்னத் துளிகளின் ஊடாக
சூரிய ஒளிக் கதிர் செல்கையிலே
வண்ணப் பிரிகை நிகழ்கிறதே
வானவில்லும் தோன்றிடுதே.

0 comments: