மிருகக் காட்சி சாலை

அம்மா அப்பா அழைத்துச் சென்றார் அங்கே ஓரிடம்
அங்கிருந்த குயிலும் மயிலும்  ஆடத் தொடங்கின
பொல்லா நரி புனுகுப் பூனை எல்லாம் இருந்தன
குட்டி மான்கள் ஒட்டைச்சிவிங்கி கூட நின்றன
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குர் குர் என்றது
யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது
முதலைத் தலையைத் தூக்கி மூச்சு விட்டது
கரடி கூட உறுமிக் கொண்டே காலைத் தூக்கிற்று
சிங்கம் புலி எல்லாம் கண்டேன் கண்டும் பயமில்லை
சூரனைப் போல் நின்றிருந்தேன் சிறிதும் அஞ்சவில்லை
சென்று வந்த இடம் உனக்குத் தெரியவில்லையா?
மிருகக் காட்சி சாலைதானே வேறு ஒன்றுமில்லை!

.

0 comments: