அம்மா

அம்மா அம்மா வருவாளே
அன்பாய் முத்தம் தருவாளே
தும்மும் போது நூறென்பாள்
துணைக்கு என்றும் நானென்பாள்
கட்டி பிடித்து அணைத்தாலும்
காலால் எட்டி உதைத்தாலும்
சுட்டித் தனங்கள் செய்தாலும்
சொந்தம் நமக்கு அம்மாவே!
பாலும் சோறும் ஊட்டிடுவாய்
பாட்டும் பாடிக் காட்டிடுவாய்
தொட்டிலி(ல்) இட்டுத் தாலாட்டித்
தூங்கச் செய்வாய் எந்தனையே
கண்ணை இமை காப்பதுபோல்
காத்து என்னை வளர்த்திடும்
அன்னை உனைப்போல் இவ்வுலகில்
ஆரும் இல்லை இல்லையே!


-கவிஞர்.த.துரைசிங்கம்

0 comments: