அண்ணல் காந்தி

உண்மையைப் பேசி வளர்வோம் நாம்
ஊரார் போற்ற வாழ்வோம் நாம்
சத்தியம் தவறா நெறியோடு
சரித்திரம் போற்ற வாழ்வோம் நாம்.


அக்கம் பக்கம் நட்போடு
அன்பாய்கூடி வளர்வோம் நாம்
ஒற்றுமை என்னும் கயிறாலே
ஒன்றாய் பிணைந்தே வாழ்வோம் நாம்.

அண்ணல் காந்தி சொன்னதெல்லாம்
அல்லும் பகலும் நினைத்திடுவோம்
அவர் வழி என்றும் நடந்திடுவோம்
அண்ணல் புகழைப் போற்றிடுவோம்.

0 comments: