எறும்பைப் பார்த்துக் கற்றுக் கொள்


எறும்புக் கூட்டம் ஊர்வதைப்பார்
எங்கே போகுது தேடிப்பார்.


செல்லும் வழியில் சிதறாமல்
உணவை எடுத்துச் செல்லுதுபார்.

அந்தோ குட்டி எறும்பும்கூட
ஆடி,ஓடி உழைக்குதே!


செல்வம் சேர்ப்பது பெரிதல்ல
சிறப்பாய் சேமிப்பும் வேண்டுமே.


எறும்பைப் பார்த்துக் கற்றுக்கொண்டு
என்றும் நன்றாய் வாழ்வோமே!

0 comments: