பள்ளிச் சிறார்களுக்கான competitive பரீட்சைகள்


16 வயதுக்குட்டபட்ட குழந்தைகளுக்கான கம்பெடிடிவ் எக்ஸாம்கள் பற்றிய பரவலான புரிதல் பல பெற்றோர்களுக்கு இல்லை என்பதை என் பள்ளிக்கு வரும் பெற்றோர்கள் மூலம் புரிபட்டது. அதன் விளைவாகவே இந்த பதிவு.

பள்ளிப் பாடங்களே சுமையாக இருக்கிறது. அதற்கும் மேல் எதற்கு இப்படிப்பட்ட பரிட்சைகள்? பள்ளிப் பாடங்களைப் படித்தாலே போதாதா? நேரமே இல்லாத நிலையில் குழந்தைகளுக்கு இது வேறு கூடுதல் மன அழுத்தம் தருமே? என்றெல்லாம் இப்படி நினைப்பவர்களுக்கு, நீங்கள் உங்கள் குழந்தையின் அறிவு சார்ந்த கல்வி பற்றிய கருத்துக்களை மறு பரிசீலனை செய்யவேண்டியது அவசியம்.

16-வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு என்னவெல்லாம் competitive exams இருக்கின்றன.

  1. ஒலிம்பியாட் (Olympiad)
  2. இண்டர்நேஷனல் சயன்ஸ் ஒலிம்பியாட் (Science Olympiad)
  3. இண்டர்நேஷனல் மேத்ஸ் ஒலிம்பியாட்(The International Mathematical Olympiad)
  4. ஐ.ஜி.எஸ்.சி. ஸ்காலர்ஷிப் எக்ஸாம் (IGSC Scholarship Examinations)
  5. மாக்மில்லன் ஐ.எ.ஐ.எஸ். (Macmillan IAIS)
  6. என்.சி.இ.ஆர்.டி. நடத்தும் டேலன்ட் ஸர்ச் (NCERT)
  7. என்.டி.எஸ்.ஈ. (NTSE)
  8. அஸ்செட் (ASSESSMENT OF SCHOLASTIC SKILLS THROUGH EDUCATIONAL TESTING (ASSET))
  9. ஸ்டார் (STAR)
  10. ஸ்பெல் பீ (Spell Bee)

ஏன் இவ்வகையான பரீட்சைகள் தேவையாக இருக்கின்றன?

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சமூகச் சூழல்கள் உருவாக்கித்தரும் தினசரி சவால்களும் பொருளீட்டத் தேவையான வேலைகளும், அறிவு சார் தொழில்களும், நம் குழந்தைகள் ஆறு வயதில் இருந்தே independent ஆக இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகி வருகிறது. அதற்குத் தேவையான life-skills, cognitive skills(அறிவாற்றல்) diagnostic மற்றும் logical thinking skills வளர இது போன்ற பரிட்சைகள் தேவையாக இருக்கின்றன.

மேலும் இந்தியாவில் தற்போதையக் கல்வி முறையில் மட்டும் பயிலும், கல்வியை மட்டுமே ஆதாரமாக கொண்டிருக்கும் ஒரு மாணவர், பள்ளியோ/கல்லூரியோ முடித்த பின் இன்னொருவரிடம் பணிக்குச் செல்லும் வகையிலேயே இருக்கின்றன. தன்னார்வமோ, தொழில் பின்புலமோ இல்லாதிருக்கும் ஒரு சாதாரண மாணவன் தானே தொழில் துவங்குதைப் பற்றியோ, அறிவியல் ரீதியாகச் சிந்திக்கவோ வெறும் பள்ளி/கல்லூரிக் கல்வி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை.

ஒரு சாதாரண மாணவரை scientific, logical, analytical, ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி, வாசிக்கும் ஆர்வத்தையும் கொடுத்து, life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற competitive பரீட்சைகள் அவசியமாக இருக்கின்றன.

மேலும் இது போன்ற பரிட்சைகள் மாணவர்களிடம் கல்வி குறித்த பதட்டத்தையும், பயத்தையும் குறைக்கின்றன. இப்பரீட்சைகளுக்குப் படிக்கும் எந்தவொரு பாடமும் நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே இந்தப் பரீட்சைகள் எழுதுவதும் தேர்ச்சி பெறுவதும் எளிதாக இருக்கும். இப்பரிட்சைகள் சிலவற்றில் அதிக grade வாங்கி தேர்ச்சிப் பெற்று இருக்கும் மாணவர்களுக்கு மேற்கொண்டு படிக்கவும் /படிப்பைத் தொடரவும் scholarship வழங்கியும் ஊக்குவிக்கிறார்கள்.

உங்கள் குழந்தைகளை இந்தப் பரிட்சைகளில் பங்கேற்க வைப்பது குறித்து உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். அப்படி உங்கள் குழந்தையின் பள்ளியில் இந்தப் பரிட்சைகள் நடத்தப் படாமல் இருந்தால், நீங்களே நேரடியாக குறிப்பிட்ட பரீட்சை நடத்தும் ஸ்தாபனங்களை தொடர்பு கொண்டு, வேறெந்த பள்ளிகள் இதை நடத்துகின்றன என்றும், அந்தப் பள்ளிகள் மூலம் எப்படிப் பங்கேற்பது என்பது பற்றிய கூடுதல் விபரம் அறிந்து கொள்ளலாம்.

வாழ்க்கையில் வெற்றியடைதல் என்பது வெறும் கிரேடுகளும் மார்க்குகளும் வாங்கிக் குவித்த பதக்கங்களின் எண்ணிக்கையால் மட்டும் நிர்ணயமாவதில்லை, அதையும் தாண்டி தம் வாழ்க்கையை குடும்பம், உறவுகள், நட்புக்கள், தொழில், பொருளாதாரம், சமூகம், என்று பல்வேறு கோணங்களிலும் திறம்பட நிர்வகிக்கத் தெரிந்த ஒருவருக்கு வெற்றி என்பது தினம் தினம் ஒரு நிகழ்வாகிப் போகிறது. அத்தகைய life-skills வளர்த்துக்கொள்ள இது போன்ற பரிட்சைகள் நிச்சயம் உதவுகின்றன.

படிக்காத மேதைகளும் இருக்கும் உலகம்தான் இது, அது போன்ற அதிருஷ்டத்திற்காகக் காத்திருக்கும் விரய-நேரத்தில், இது போன்ற பரிட்சைகள் எழுத ஊக்குவித்தல் உங்கள் குழந்தைகளின் independent ஆக்கி, நாம் இல்லாமல் போகும் போதும் திறம்பட தானே தன் வாழ்க்கையை நிர்வகித்துக் கொள்ள வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்.

உங்களுக்கு இது குறித்த கேள்விகள் இருந்தால் கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள். என்னால் இயன்றளவு விபரங்களைச் சேகரித்துத் தருகிறேன். நன்றி.

6 comments:

இன்றைய கவிதை said...

அருமையான பதிவு விதூஷ் மிக தேவையான ஒன்றும் கூட மிக அன்மையில் வானொலியில் இதே விஷயத்தை விவாதிக்க கேட்டேன் எனக்கு தெரிந்து இவ்வகை பரிட்சைகள் நம் குழந்தைகளை மேலும் செம்மைப்படுத்தும் அது மிக அத்யாவசிய தேவையாகிறது இன்றைய காலக்கட்டத்தில்

செய்தி என்ற ஒரு பரிமாணத்தையே அறியாத உலகில் வாழும் மாணவர்களுக்கு இத்தைகைய பரிட்சைகள் படிப்பின் சுற்றத்தில் இருக்கும் ஏனைய விஷயத்தையும் படிப்பிக்கும் என்பதில் இரு கருத்து இருக்க முடியாது

உங்கள் பதிவில் நானு கொஞ்சம் கற்றுக்கொண்டேன்

மிக்க நன்றி விதுஷ்

ஜேகே

நட்புடன் ஜமால் said...

இங்க போட்டிருக்காங்க

Vidhoosh said...

நன்றி ஜே.கே.

நன்றி ஜமால். லிங்க் வேலை செய்யலை.

நட்புடன் ஜமால் said...

http://adirainirubar.blogspot.com/2011/07/competitive.html

Vidhoosh said...

ஆஹா. நன்றி ஜமால். இது நிறையா பேரை சென்றடைந்தால் மகிழ்ச்சியே.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

வலைச்சர தள இணைப்பு : சுட்டிக் குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான வலைப்பூக்கள்