தாகம் தீர்ந்த காக்காய்

தாகத்தோடு காக்கா ஒன்று
தண்ணீருக்கு அலைந்ததாம்
வானில் பறந்து செல்கையில்
வயலில் பானை பார்த்ததாம்
கொஞ்சம் நீரே இருந்ததால்
குடிக்க முடியாமல் தவித்ததாம்
சின்ன சின்ன கற்களை
கொண்டுவந்து போட்டதாம்
கல்லு அதிகம் ஆனதும்
தண்ணீர் மேலே வந்ததாம்
தண்ணீர் குடித்த காக்கா
தாகம் தீர்ந்து பறந்ததாம்

0 comments: