காக்கா நரியின் கதை

பாப்பா பாப்பா கதை கேளு
காக்கா நரியின் கதை கேளு
தாத்தா பாட்டி சொன்ன கதை
அம்மா அப்பா கேட்ட கதை
ஊருக்கு வெளியே ஒரு கடையாம்
கடையில் வெங்காய வடை இருக்காம்
வடையைக் காக்கா திருடிடிச்சாம்
மரத்தின் மேலே ஏறிகிச்சாம்
காக்கா வாயிலே வடையிருக்கா
குள்ள நரியும் பாத்திருச்சாம்
நேக்கா வடையை தின்றிடவே
நரியும் தந்திரம் பண்ணிடுச்சாம்
காக்காவ பாட்டு பாடச் சொல்லி
குள்ள நரியும் கேட்டுகிச்சாம்
வாய திறந்து காக்காவும்
பாட்டு ஒன்னு பாடிடுச்சாம்
வடையும் கீழே விழுந்திருச்சாம்
நரியும் வடையை கவ்விகிச்சாம்
வாயில போட்டு முழுங்கிருச்சாம்

0 comments: