ஆனை ஆனை

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
காட்டுக் கரும்பை முறிக்கும் யானை
காவேரி நீரை கலக்கும் யானை
எட்டித் தேங்காய் பறிக்கும் யானை
குட்டி யானைக்குத் தந்தம் முளைச்சுதாம்
பட்டணமெல்லாம் நடந்து போச்சுதாம்

0 comments: