குருவி

பஞ்சு போல் மேனியால்
பறந்து வரும் குருவியே
பக்கத்தில் வந்ததும்
பாசங் காட்டும் குருவியே
இரண்டு சிறிய கண்களால்
இரையைத் தேடும் குருவியே
இனிய கீச்சுக் குரலிலே
இசை பாடும் குருவியே
கோரைப் புற்கள் சுள்ளியால்
கூடு கட்டும் குருவியே
பொழுது சாயும் வேளையில்
கூடு திரும்பும் குருவியே
ஜோடியாக அன்புடன்
வாழ்ந்து வரும் குருவியே
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: