ஆசிரியர்

பாடம் கற்றுத் தருவாரே
பண்பாய் வாழச் செய்தாரே
ஒழுக்கம் கற்றுத் தருவாரே
ஒழுங்காய் வாழச் செய்தாரே
அன்பு செய்ய சொன்னாரே
அழகாய் பேசச் செய்தாரே
கருணை காட்டச் சொன்னாரே
கவிதைப் பாடச் செய்தாரே
தப்பு செய்தால் அடிப்பாரே
திரும்பச் செய்யாமல் தடுப்பாரே
ஏணிப் போலே இருப்பவரே
எங்களை ஏற்றி விட்டாரே
அறிவை வளர்த்த ஆசிரியரே
ஆயிரம் நன்றி கூறுகிறோம்

0 comments: