எங்கள் தாய்நாடு

பாரதம் எங்கள் தாய்நாடு
பாரில் உயர்ந்த பொன்நாடு
யாரும் கூடித் தோழர்களாய்
இன்பம் காணும் திருநாடு
வடக்கே இமய மலை எல்லை
வணங்கும் குமரி தென் எல்லை
கேள் நீ இதற்கு நிகர் இல்லை
எத்தனை மதங்கள் இந்நாட்டில்
எத்தனை மொழிகள் இந்நாட்டில்
எத்தனை இனங்கள் இந்நாட்டில்
எனினும் நாம் ஒரு தாய் மக்கள்

0 comments: