வானத்திலே திருவிழா

கவிஞர் முனைவர் பொன்.செல்வகணபதி

வானத்திலே திருவிழா!
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்!
மின்னலொரு நாட்டியம்
மேடை வான மண்டபம்
தூறலொரு தோரணம்
தூய மழை காரணம்!
எட்டுதிசை காற்றிலே
ஏக வெள்ளம் ஆற்றிலே!
தெருவிலெல்லாம் வெள்ளமே
திண்ணை யோரம் செல்லுமே!
தவளை கூடப் பாடுமே
தண்ணீரிலே ஆடுமே!
பார்முழுதும் வீட்டிலே
பறவைகூட கூட்டிலே!
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை!

0 comments: