நத்தை

நத்தைக் கூட்டைப் பாருங்கள்
நகரும் அழகை ரசியுங்கள்
கெட்டியான வீட்டினுள்
அமைதியாக வாழுது
மெல்ல எட்டிப் பார்க்கையில்
பட்டு மேனி மின்னுது
மழையின் காலம் முழுவதும்
கவலை இன்றி உலவுது
ஆசை கொண்டு தொடுகையில்
அதுவும் வாசல் அடைக்குது
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: