தபால்காரர்

தபால்காரர் வருகிறார்
தபால் கொண்டு தருகிறார்
வீடு தேடி வருகிறார்
மணியடித்து அழைக்கிறார்
வெய்யிலிலும் வருகிறார்
விரைந்து தபால் தருகிறார்
மழையின் போதும் வருகிறார்
மதித்து கடமை செய்கிறார்
காக்கி உடையில் வருகிறார்
கருத்தாய் கடமை செய்கிறார்
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: