தாத்தா

நாளும் என்னை பள்ளிக்கு
கூட்டிச் செல்லும் தாத்தா
நல்ல நல்ல பண்டங்கள்
வாங்கித் தரும் தாத்தா
தூங்கும் முன்னே இரவினிலே
கதைகள் சொல்லும் தாத்தா
தூக்கி என்னை செல்லமாய்
கொஞ்சி மகிழும் தாத்தா
கட்ட சைக்கிள் ஓட்டவே
கற்றுத் தந்தத் தாத்தா
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: