குழந்தை

மழலை மொழி பேச்சினால்
மனதைக் கவரும் குழந்தையாம்
மாசில்லாத உள்ளத்தால்
மகிழ்ச்சி தரும் குழந்தையாம்
கள்ளமில்லா பார்வையால்
கனிவு காட்டும் குழந்தையாம்
தவழ்ந்து போகும் குழந்தையாம்
தளர்ந்து போகா குழந்தையாம்
மிட்டாய் கேட்கும் குழந்தையாம்
மெல்லச் சிரிக்கும் குழந்தையாம்
-வல்லநாடு ராமலிங்கம்

0 comments: